பழகிய வல்வினைகள் பாற்றுவானை, பசுபதியை,
பாவகனை, பாவம் தீர்க்கும்
குழகனை, கோள் அரவு ஒன்று ஆட்டுவானை,
கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்தன்னை,
விழவனை, வீரட்டம் மேவினானை,
விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை,
அழகனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது
அடிநாயேன் அயர்த்த ஆறே!.