முந்திய வல்வினைகள் தீர்ப்பான்தன்னை,
மூவாத மேனி முக்கண்ணினானை,
சந்திரனும் வெங்கதிரும் ஆயினானை,
சங்கரனை, சங்கக் குழையான்தன்னை,
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்தன்னை,
மறுமையும் இம்மையும் ஆனான்தன்னை,
அம் திரனை, ஆரூரில் அம்மான்தன்னை,
-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.