பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து, மாமலையான் மடந்தை ஒருபால் பாகம் ஆகச் செய்த உம்பர்பிரான் அவன் ஊர் கரு ஆர் சாலி ஆலை மல்கி, கழல் மன்னர் காத்து அளித்த திருவால் மலிந்த சேடர் வாழும் தென்திருப்பூவணமே.