அண்ணாமலை அமர்ந்தார்; ஆரூர் உள்ளார்; அளப்பூரார்;
அந்தணர்கள் மாடக்கோயில்
உண்ணாழிகையார், உமையாளோடும்; இமையோர்
பெருமானார்; ஒற்றியூரார்;
பெண்ணா கடத்துப் பெருந் தூங்கானை-மாடத்தார்;
கூடத்தார்; பேராவூரார்
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே
மேவினாரே.