கொண்டல் உள்ளார்; கொண்டீச்சுரத்தின் உள்ளார்; கோவலூர்
வீரட்டம் கோயில் கொண்டார்;
தண்டலையார்; தலையாலங்காட்டில் உள்ளார்; தலைச்சங்கைப்
பெருங்கோயில் தங்கினார் தாம்;
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நன்நீர்
வலஞ்சுழியார்; வைகலில் மேல்மாடத்து உள்ளார்;
வெண்தலை கைக் கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே
மேவினாரே.