திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

புன்கூரார்; புறம்பயத்தார்; புத்தூர் உள்ளார்; பூவணத்தார்;
புலிவலத்தார்; வலியின் மிக்க
தன் கூர்மை கருதி வரை எடுக்கல் உற்றான் தலைகளொடு
மலைகள் அன தாளும் தோளும்
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி, பொருப்பு
அதன் கீழ் நெரித்து, அருள்செய் புவன நாதர்;
மின் கூரும் சடைமுடியார்; விடையின் பாகர் வீழிமிழலையே
மேவினாரே.

பொருள்

குரலிசை
காணொளி