புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே
நடம் ஆடு(வ்)வார்;
உடை சூழ்ந்த புலித்தோலர்; கலிக் கச்சி(ம்) மேற்-றளி உளார்;
குளிர்சோலை ஏகம்பத்தார்;
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காள(ன்)னார்; கழுமலத்தார்;
செழு மலர்த்தார்க் குழலியோடும்
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே
மேவினாரே.