மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர்
உரு ஆய முதல்வர்; இந் நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த
குழகனார்; குளிர்கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்ல,
புறக்கணித்து, தம்முடைய பூதம் சூழ,
“வா வா!” என உரைத்து, மாயம் பேசி,
வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே