திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும்,
வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்,
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும்,
கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும்,
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும்,
உத்தமராய் எத்திசையும் மன்னினாரும்,
விளங்(கு)கிளரும் வெண்மழு ஒன்று ஏந்தினாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

பொருள்

குரலிசை
காணொளி