வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர்
சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்;
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும்
தில்லை நடம் ஆடும் தேவர் போலும்;
ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்;
நன்மையும் தீமையும் ஆனார் போலும்;
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும்
திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.