விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்;
வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்;
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்;
அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்;
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண்நீர்த்
திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.