மா வாய் பிளந்து உகந்த மாலும், செய்ய-
மலரவனும், தாமேயாய் நின்றார் போலும்;
மூவாத மேனி முதல்வர் போலும்;
முதுகுன்றமூதூர் உடையார் போலும்;
கோ ஆய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரை
கழலால், அன்று, குமைத்தார் போலும்;
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச்
சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.