திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள் செய்வானை; சுடர்
மழுவாள் படையானை; சுழி வான் கங்கைத்
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை; செக்கர்
வான் ஒளியானை; சேராது எண்ணிப்
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம்
பாழ்படுத்து, தலை அறுத்து, பல் கண் கொண்ட
கண்டகனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண்
ஆரக் கண்டு உய்ந்தேனே!.

பொருள்

குரலிசை
காணொளி