திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கேசி

மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதி ஆய், முன்னே அனல் வாளி
கோப்பார், பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர், குடமூக்கில்
தீர்ப்பார், உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமை;
காப்பார், காலன் அடையா வண்ணம்; காரோணத்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி