திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

முன் நெறி வானவர் கூடித் தொழுது ஏத்தும் முழு முதலை,
அந் நெறியை, அமரர் தொழும் நாயகனை, அடியார்கள்
செந் நெறியை, தேவர் குலக் கொழுந்தை, மறந்து இங்ஙனம் நான்
என் அறிவான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

பொருள்

குரலிசை
காணொளி