திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

ஏழ் இசை ஆய், இசைப் பயன் ஆய், இன் அமுது ஆய், என்னுடைய
தோழனும் ஆய், யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி,
மாழை ஒண் கண் பரவையைத் தந்து ஆண்டானை, மதி இல்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

பொருள்

குரலிசை
காணொளி