வான் வந்த தேவர்களும், மால், அயனோடு, இந்திரனும்,
கான் நின்று வற்றியும், புற்று எழுந்தும், காண்பு அரிய
தான் வந்து, நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு,
ஊன் வந்து உரோமங்கள், உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து, அமுதின் தெளிவின் ஒளி வந்த,
வான் வந்த, வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!