செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும், காண்பு அரிய
பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி,
எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு,
தெங்கு திரள் சோலை, தென்னன் பெருந்துறையான்,
அம் கணன், அந்தணன் ஆய், அறைகூவி, வீடு அருளும்
அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!