பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை, மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை, தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை, பெண் ஆளும் பாகனை, பேணு பெருந்துறையில் கண் ஆர் கழல் காட்டி, நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானை பாடுதும் காண்; அம்மானாய்!