திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை,
வல்லாளன், தென்னன், பெருந்துறையான், பிச்சு ஏற்றி,
கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை
வெள்ளத்து அழுத்தி, வினை கடிந்த வேதியனை,
தில்லை நகர் புக்கு, சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானை பாடுதும் காண்; அம்மானாய்!

பொருள்

குரலிசை
காணொளி