திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சுந்தரத்து இன்பக் குயிலே! சூழ் சுடர் ஞாயிறு போல,
அந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்;
முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடியானை; சேவகனை; வரக் கூவாய்!

பொருள்

குரலிசை
காணொளி