திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: வியாழக்குறிஞ்சி

விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி
கடை கடை தொறு, “பலி இடுக!” என முடுகுவர்,
இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர்
உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே.

பொருள்

குரலிசை
காணொளி