திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே,
ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம் ஆனேன்;
தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்!
நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே?

பொருள்

குரலிசை
காணொளி