திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

பள்ளம் ஆர் சடையின் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான், விடை எறிய வேதியன்,
வள்ளல், மா மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரிமின், வினைஆயின ஓயவே!

பொருள்

குரலிசை
காணொளி