வாச நலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர் தூவ,
ஈசன், எம்பெருமானார், இனிது ஆக உறையும் இடம்
யோசனை போய்ப் பூக் கொணர்ந்து, அங்கு ஒருநாளும்
ஒழியாமே,
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்கு வேளூரே.