திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடி ஆகப்
பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்
வேதத்தின் மந்திரத்தால், வெண்மணலே சிவம் ஆக,
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

பொருள்

குரலிசை
காணொளி