திறம் கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே,
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி
வந்தானைப்
புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்கு வேளூரே.