நேமியானும், முகம் நான்கு உடைய(ந்) நெறி அண்ணலும்,
"ஆம் இது" என்று தகைந்து ஏத்தப் போய், ஆர் அழல்
ஆயினான்;
சாமிதாதை; சரண் ஆகும் என்று, தலைசாய்மினோ
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே!