பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம் இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்; மலையினில் அரிவையை வெருவ, வன் தோல் அலைவரு மதகரி உரித்தவனே! இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.