திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

நெடு முடிபத்து உடைய நிகழ் வாள் அரக்கன்(ன்) உடலைப்
படும் இடர் கண்டு அயர, பருமால் வரைக்கீழ் அடர்த்தான்;
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா,
இடு மணல் எக்கர் சூழ இருந்தான்; அவன் எம் இறையே.

பொருள்

குரலிசை
காணொளி