கரு அடிய பசுங் கால் வெண்குருகே! ஒண் கழி நாராய்!
“ஒரு அடியாள் இரந்தாள்” என்று, ஒரு நாள் சென்று,
உரையீரே!
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
திருவடி தன் திரு அருளே பெறல் ஆமோ, திறத்தவர்க்கே?