சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள்
பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம்
கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு
வீழிநகரே.