ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும், எழில் அன்ன
உருவம்
ஆனவனும், ஆதியினொடு அந்தம் அறியாத அழல்மேனியவன்
ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம்
கொள் பொழில்வாய்
வேனல் அமர்வு எய்திட, விளங்கு ஒளியின் மிக்க புகழ்
வீழிநகரே.