பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது
இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி
அதனால்,
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில்
வீழிநகரே.