மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகை
போய்,
அந்தர-விசும்பு அணவி, அற்புதம் எனப் படரும் ஆழி
இருள்வாய்,
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்,
வெந்தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே.