செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு நன்கலை தெரிந்த
அவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற
அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர்-தண்புனல் வளம்
பெருகவே,
வெந் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி
வீழிநகரே.