கோத்த கல்லாடையும், கோவணமும், கொடுகொட்டி
கொண்டு ஒரு கை,
தேய்த்து அன்று அநங்கனைத் தேசு அழித்து, திசையார்
தொழுது ஏத்த,
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம்
போலும்
வாய்த்த முத்தீத் தொழில் நால் மறையோர் வலம்புர
நன்நகரே.