செற்று எறியும் திரை ஆர் கலுழிச் செழுநீர் கிளர்
செஞ்சடை மேல்
அற்று அறியாது, அனல் ஆடு நட்டம், அணி ஆர்
தடங்கண்ணி
பெற்று அறிவார், எருது ஏற வல்ல பெருமான், இடம்போலும்
வற்று அறியாப் புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.