திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

நொய்யது ஒர் மான்மறி கைவிரலின் நுனை மேல் நிலை ஆக்கி,
மெய் எரிமேனி வெண் நீறு பூசி, விரிபுன் சடை தாழ,
மை இருஞ் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
வைகலும் மா முழவம்(ம்) அதிரும் வலம்புர நன்நகரே.

பொருள்

குரலிசை
காணொளி