ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரின் பொருள்
அன்று;
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை
ஏத்துமினோ!
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள்
இடம்போலும்
வானவர் நாள்தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்நகரே.