சேற்றின் ஆர் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால்,
இவர் இருகூறாத்
தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும்
பெருமையும் தம்மில்
சாற்றினார், சாற்றி, “ஆற்றலோம்” என்ன, சரண் கொடுத்து,
அவர் செய்த பாவம்
பாற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.