திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடை மேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார்; அன்பு எனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பொருள்

குரலிசை
காணொளி