திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

நரி புரி சுடலை தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை;
சுரி புரி குழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை;
தெரி புரி சிந்தையார்க்குத் தெளிவு அலால் அருளும் இல்லை-
அரி புரி மலர்கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.

பொருள்

குரலிசை
காணொளி