திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

சிந்தையும் தெளிவும் ஆகி, தெளிவினுள் சிவமும் ஆகி,
வந்த நன் பயனும் ஆகி, வாணுதல் பாகம் ஆகி,
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென் கரை மேல் மன்னி
அந்த மோடு அளவு இலாத அடிகள்-ஆப்பாடியாரே.

பொருள்

குரலிசை
காணொளி