திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

கச்சை சேர் அரவர் போலும்; கறை அணி மிடற்றர் போலும்;
பிச்சை கொண்டு உண்பர் போலும்; பேர் அருளாளர் போலும்;
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

பொருள்

குரலிசை
காணொளி