திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்;
தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்;
வன்மையால் மலை எடுத்தான் வலியினைத் தொலைவித்து, ஆங்கே
நன்மையால் அளிப்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

பொருள்

குரலிசை
காணொளி