திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

கல்-துணை வில் அது ஆகக் கடி அரண் செற்றார் போலும்;
பொன்துணைப் பாதர் போலும்; புலி அதள் உடையார் போலும்;
சொல்-துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்
நல்-துணை ஆவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

பொருள்

குரலிசை
காணொளி