திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அவ்(வ்) வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞானவேடன், விசயற்கு அருள்செய்யும்
கான வேடன்தன், வெண்காடு அடை, நெஞ்சே!

பொருள்

குரலிசை
காணொளி