திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

சந்திர(ன்)னொடு சூரியர்தாம் உடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்தபின்,
ஐந்தலை அரவின் பணி கொண்டு, அருள்
மைந்தர்போல்-மணி நாகேச்சுரவரே.

பொருள்

குரலிசை
காணொளி