திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

ஆட்டினான், முன் அமணரோடு என்தனை;
பாட்டினான், தன பொன் அடிக்கு இன் இசை;
வீட்டினான், வினை; மெய் அடியாரொடும்
கூட்டினான் குரங்காடுதுறையனே.

பொருள்

குரலிசை
காணொளி